போக்சோ வழக்கில் உதவி காவல் ஆய்வாளர் துரைராஜ் கைது

by Staff / 23-10-2023 04:14:57pm
போக்சோ வழக்கில் உதவி காவல் ஆய்வாளர் துரைராஜ் கைது

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவர் துடியலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார்.இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் முறையற்ற உறவு இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் அந்த பெண் இல்லாத சமயத்தில் அவரின் 17 வயது மற்றும் 19 வயது பெண்களை பாலியல் ரீதியாக உதவி ஆய்வாளர் துரைராஜ் துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் 17 வயது மற்றும் 19 வயது சிறுமிகள் வீட்டில் இருந்து வெளியேறினர்.இரு இளம் பெண்கள் மாயமானது குறித்து அவரது தாயார் மத்திய மகளிர் காவல் துறையினர் புகார் கொடுத்தார்.இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் வேறு ஒரு நண்பர் வீட்டில் இருப்பது தெரியவந்தது.இரு பெண்களையும் மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் உதவி ஆய்வாளர் துரைராஜ், இளம் பெண்கள் இருவரையும் பாலியல் துன்புறுத்தல் செய்தது குறித்தும், அவரது தொந்தரவுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்தனர்.

 

Tags :

Share via