புதுமணப்பெண் கணவன் வீட்டில் சடலமாக மீட்பு
திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை கணவர் வீட்டில் புதுமணப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். உயிரிழந்தவர் பன்னியோட்டைச் சேர்ந்த சோனா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் நடந்துள்ளது. சட்ட ஆவண மையத்தில் தட்டச்சராக பணிபுரியும் சோனா, சில வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் ஆட்டோ ரிக்ஷா டிரைவராக உள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவர் இறந்துவிட்டார். பிரேதப் பரிசோதனைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.Tags :