இலவச பேருந்து பயணத்திற்காக புர்கா அணிந்த ஆண்

by Staff / 08-07-2023 02:11:23pm
இலவச பேருந்து பயணத்திற்காக புர்கா அணிந்த ஆண் கர்நாடகத்தில் இலவச பேருந்து பயணத்திற்காக ஆண் ஒருவர் புர்கா அணிந்து கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் தார்வாட்டில் உள்ள சான்ஷி பேருந்து நிலையத்தில் புர்கா அணிந்த ஒரு நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரிடம் பொதுமக்கள் பேசுகையில், அவரிடம் ஒரு பெண்ணின் ஆதார் அட்டை நகல் சிக்கியதாகவும், சக்தி திட்டத்தில் பேருந்தில் இலவசமாக பயணிக்க இப்படி செய்ததாக கூறினார். இதனை தொடர்ந்து இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

Tags :

Share via