டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

by Staff / 14-07-2023 11:19:39am
டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

டெல்லியில் பெய்து வரும் தொடர் மழை காரணத்தால் வெள்ளம் புகுந்ததால் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டெல்லியில் பள்ளிகள், அரசு அலுவலகங்களை ஜூலை 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வசிராபாத் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் பார்வையிட்ட டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லியில் சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும். நீர்மட்டம் குறைந்தவுடன், இந்த நிலையங்களை இயக்கத் தொடங்குவோம்" என்று கூறியுள்ளார்.

 

 

Tags :

Share via