மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் மாவட்ட ஆட்சியர்

by Editor / 31-07-2023 12:54:01pm
மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் மாவட்ட ஆட்சியர்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி மன்னனின் சிறப்பை போற்றி, ஆடி மாதத்தில் அரசு சார்பில் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி நாளை முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொல்லிமலை சுற்று வட்டார பகுதிகளில் மூன்று நாட்களுக்கு கள்ளத்தனமாக மது விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். மேலும் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மது பாட்டில் எடுத்து வர தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via