பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை.. வராண்டாவில் போட்ட அதிர்ச்சி

by Staff / 09-08-2023 01:14:27pm
பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை.. வராண்டாவில் போட்ட அதிர்ச்சி

விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில், படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக, அறுவைசிகிட்சை மூலம் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை தன் தாயுடன், எந்த அடிப்படை சுகாதார வசதிகளும் இல்லாமல் வராண்டாவில் படுக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும், இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விக்கிரவாண்டி எம்எல்ஏ உடனடி நடவடிக்க எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via