மதுபானம் வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை
தமிழகத்தில் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடை செய்யும் வகையில், மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் மது விற்பனை நேரம் குறைப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், மது வாங்குவோருக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும், அரசின் அடையாள அட்டை வைத்துள்ளோருக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
Tags :