துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்ற ஆட்டோ டிரைவர்

by Staff / 10-08-2023 02:30:25pm
துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்ற ஆட்டோ டிரைவர்

திருச்செங்கோட்டில் விஜயலட்சுமி என்பவர் வீட்டில் துப்பட்டாவால் கழுத்து இறுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.கணவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியான. அதன் விவரம் வருமாறு: - விஜயலட்சுமியும், செல்வமும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 24 வயது வித்தியாசம் இருந்ததாக தெரிகிறது. இந்த வயது வித்தியாசம் தொடர்பாக விஜயலட்சுமி நடத்தையில் செல்வம் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகவும் தெரிகிறது.சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் துப்பட்டாவால் விஜயலட்சுமி கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் துப்பட்டா கழுத்தில் சுற்றப்பட்ட நிலையில் விஜயலட்சுமி உடலை வைத்துக்கொண்டு உறவினர்களிடம் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி கதறி அழுதுள்ளார். இதை உறவினர்கள் நம்பி உள்ளனர். இதற்கிடையே விஜயலட்சுமி கழுத்தில் இருந்த காயங்கள் ஏற்படுத்திய சந்தேகம் அவரை போலீசாருக்கு காட்டிக் கொடுத்துள்ளது. உடனே போலீசார் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றினர். காதல் மனைவியை கொலை செய்ததாக ஆட்டோ டிரைவர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via