போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை
இந்தியாவின் 77வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட்-15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த போர் வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, டெல்லி போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர், "சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு இந்த தேசமே தலை வணங்குகிறது" என்று கூறியுள்ளார். மேலும், IndependenceDay2023, 15august2023, Jai Hind, Red Fort ஆகிய ஹேஷ்டேக்குகளில் புகைப்படங்களையும், கருத்துகளையும் பகிர்ந்து வருவதால் ட்ரெண்டகி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags :