நிவாரணத் தொகை ரூ.8000ஆக உயர்வு - முதல்வர்
மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை ரூ.5000ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் பேசிய அவர், ''1,000 நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும். மீனவர்களுக்குக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5,035 பேருக்கு வீடுகளுக்கான பட்டா வழங்கப்படும். தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் 3,700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
Tags :