சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத சிறப்பு பூஜை

by Staff / 18-08-2023 02:34:10pm
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத சிறப்பு பூஜை

ஆவணி மாதத்தின் முதல் தேதியான இன்று சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் பிரவேசித்துள்ளார். இந்த நிலையில், ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வரும் 21ஆம் தேதி வரை தினமும் வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி ஆன்லைன் முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் வரும் 29ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதற்கான சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை வரும் 27ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்.

 

Tags :

Share via