கஞ்சா விற்றவர் கைது

by Staff / 18-08-2023 05:17:24pm
கஞ்சா விற்றவர் கைது

கோவை மாவட்டம் பீளமேடு அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பீளமேடு காவல்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது, தகவலின் அடிப்படையில் பீளமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர், ராஜ்குமார் தலைமையில் சம்பவ இடத்தில் திடீர் சோதனை செய்தனர், அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 27 வயதான வினோத்குமார் என்பவரை கைது செய்தனர், மேலும், அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via