ஏழு குழந்தைகளை கொன்ற செவிலியர்

by Staff / 19-08-2023 04:02:27pm
ஏழு குழந்தைகளை கொன்ற செவிலியர்

பிரிட்டனில் உள்ள கவுண்டஸ் ஆஃப் செஸ்டர் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் லூசி லெட்பி என்ற பெண் இந்த கொடூரத்தை செய்துள்ளார். அவர் 2015 முதல் 2016-க்கு இடையில் ஏழு குழந்தைகளைக் கொன்றுள்ளார். குழந்தைகள் நோய்வாய்ப்படாமல் திடீர் திடீரென இறந்துள்ளனர். ஆனால் லூசி குழந்தைகளுக்கு வெற்று ஊசிகளை ஏற்றி அவர்களுக்கு ஒரு நேரத்தில் இன்சுலின் ஊசி போட்டு கொன்றார். அவருக்கு எதிரான சாட்சியங்கள் நிரூபிக்கப்பட்டதால், நீதிமன்றம் அவர் குற்றவாளி என சமீபத்தில் தீர்ப்பளித்தது.

 

Tags :

Share via