இந்து பெண்ணுடன் திருமணம்.. பெற்றோர் அடித்துக் கொலை

by Staff / 20-08-2023 03:53:13pm
இந்து பெண்ணுடன் திருமணம்.. பெற்றோர் அடித்துக் கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரில் அப்பாஸ் மற்றும் கம்ருல் நிஷா என்ற முஸ்லிம் தம்பதியினரின் மகன் ஷௌகத், ரூபி என்ற இந்து பெண்ணை அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை ராம்பால் தனது கூட்டாளிகள் நான்கு பேருடன் சேர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஷௌகத் பெற்றோர்களை இரும்பு கம்பிகளால் அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஷௌகத் பெற்றோர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.

 

Tags :

Share via