டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனம் தள்ளிப்போகும் சூழல்..?
டி.என்.பி.எஸ்.சி தலைவராக கடந்த ஜூன் மாதம் ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவைநியமிக்க தமிழக அரசு பரிந்துரை கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பியது. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்பட்டதா? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை அரசு பின்பற்றப்படவில்லை என்று கூறி இது தொடர்பான ஆவணங்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.இதன் காரணமாக டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனம் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.
Tags : டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனம்