வலி நிவாரண மாத்திரை விற்றவர் கைது

by Staff / 22-08-2023 05:49:43pm
வலி நிவாரண மாத்திரை விற்றவர் கைது

ராமாபுரத்தில், சட்ட விரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகளை விற்ற நபரை, போலீசார் கைது செய்தனர். ராமாபுரம் காவல் நிலைய எல்லையில் போதைக்காக, உடல் வலி நிவாரண மாத்திரைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக, ராமாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி, அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம், ராமாபுரம் காமராஜர் சாலையில் சந்தேகப்படும்படி நின்ற நபரை மடக்கி விசாரித்தனர். அவரை சோதனை செய்த போது, போதைக்காக பயன்படுத்தப்படும் உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்தார். தொடர் விசாரணையில் பிடிபட்டவர், நெசப்பாக்கம் மூன்றாவது தெருவைச் சேர்ந்த ஜெயகுமார், 23, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 55 மாத்திரைகள் மற்றும் இருசக்கர வாகனம், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via