வீட்டு விசேஷத்திற்கு மாவிலை வாங்குவது போல் நடித்து கைவரிசை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரயில்வே ஊழியர் கைது.

by Editor / 03-12-2022 10:05:00pm
வீட்டு விசேஷத்திற்கு மாவிலை வாங்குவது போல் நடித்து கைவரிசை  பணியிடை நீக்கம் செய்யப்பட்ட  ரயில்வே ஊழியர் கைது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள தென்கரை மாத்தூர் பகுதியைச் சேர்ந்த 55 வயதான ராணி என்பவர் வீட்டில் தனியாக இருக்கும்போது விசேஷத்திற்கு மாவிலை வேண்டுமென்று நடித்து ராணி மாவிலை பறித்து வருவதற்குள் மாவிலை பறித்து வருவதற்குள் வீட்டில் இருந்த ஐந்து சவரன் நகையை திருடி சென்றவர் குறித்து பேரளம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். 

தற்போது ஆறு மாதங்கள் கழித்து இந்த வழக்கில் தொடர்புடைய 58 வயதான பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரயில்வே ஊழியரான மாவிலை முத்துகிருஷ்ணன் என்பவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 5 சவரன் நகையை பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் பல மாவட்டங்களில் இது போன்று முத்துகிருஷ்ணன் கைவரிசை காட்டியுள்ளது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது

 

Tags :

Share via