தமிழக மருத்துவ மாணவர் மர்ம மரணம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மருத்துவம் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவரின் உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மதன்குமார் என்ற மாணவர், ராஞ்சியில் உள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் கழகத்தில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். மாணவரின் மரணம் திட்டமிட்ட கொலையா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரியில் உடன் படிக்கும் சக மாணவர்கள், தமிழக மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளி மாநிலங்களில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags :