இஸ்ரேலின் இந்த தாக்குதல் போர்க் குற்றம்: ஐ.நா

by Staff / 02-11-2023 05:25:59pm
இஸ்ரேலின் இந்த தாக்குதல் போர்க் குற்றம்: ஐ.நா

இஸ்ரேல் - பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த மாதம் 7ஆம் தேதி போர் தொடங்கியது. இரு தரப்பிலும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் தற்போது காஸாவின் ஜபாலியா அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இது குறித்து ஐ.நா வெளியிட்ட அறிக்கையில், அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர்க் குற்றமாகும். இந்த தாக்குதலில் அதிகப்படியான அகதிகள் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம் என்று குறிப்பிட்டுள்ளது.

 

Tags :

Share via