அமைச்சர் உதயநிதிக்கு இடைக்கால தடை விதிப்பு

by Staff / 21-09-2023 12:37:06pm
அமைச்சர் உதயநிதிக்கு இடைக்கால தடை விதிப்பு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் உதயநிதிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்தார். உதயநிதி தன்னை பற்றி பேசியதற்கு ரூ 1.10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என கோரினார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி குறித்து 2 வாரகளுக்கு அவதூறு கருத்துகளை தெரிவிக்ககூடாது என உதயநிதி ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via