3-ம் உலக போர் தொடங்கி 60 ஆண்டுகளாகிவிட்டதா..? அமெரிக்க இராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்...

by Admin / 16-10-2021 10:29:36pm
3-ம் உலக போர் தொடங்கி 60 ஆண்டுகளாகிவிட்டதா..? அமெரிக்க இராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்...

3ஆம் உலக போர் தொடங்கி 60 ஆண்டுகள் ஆகிவிட்டதாக அமெரிக்க இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

 வேற்றுகிரகவாசிகளால் 60 ஆண்டுகளுக்கு முன்பே மூன்றாம் உலக போர் தொடங்கி விட்டதாக, அமெரிக்க இராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

 அணு ஆயுதங்களை வேற்றுகிரகவாசிகள் திருடிச் சென்றதை தாம் பார்த்துள்ளதாக, அமெரிக்காவின் மூத்த ராணுவ அதிகாரி ராபர்ட் சலாஸ் தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த தலைவர்கள் 4 பேர், இது குறித்த ஆவணங்களை வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
 
 1967-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி வேற்றுகிரகவாசிகள் இங்கு வந்து, அணு  ஆயுத அமைப்புகளில் மாற்றம் செய்து அதனை முடக்கிவிட்டதாகவும், ராபர்ட் சலாஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விமானப்படையில் ஆயுத கட்டுப்பாட்டாளராக பணியாற்றியுள்ள ராபர்ட் சலாஸ், கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணை பிரிவுக்கான கமாண்டராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags :

Share via