பிஸ்லெரியை டாடா குழுமம் .7000 கோடிக்கு வாங்க முடிவு

by Staff / 24-11-2022 05:01:31pm
 பிஸ்லெரியை டாடா குழுமம் .7000 கோடிக்கு வாங்க முடிவு

பிரபல குடிநீர் நிறுவனமான பிஸ்லெரியை டாடா குழுமம் ரூ.7000 கோடிக்கு வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிஸ்லெரி நிறுவனத்தின் தலைவர் செளஹானுக்கு தற்போது 82 வயதாகிறது. அவருடைய மகளுக்கு அந்த நிறுவனத்தை நடத்த விருப்பமில்லாததால் விற்க முடிவெடுத்துள்ளார். பிஸ்லெரியை வாங்க ரிலையன்ஸ், நெஸ்லே உள்ளிட்ட பல நிறுவனங்கள் போட்டிப்போட்ட நிலையில், 2 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி டாடாவின் தொழில்நெறிமுறைகள் பிடித்துபோனதால், டாடா கன்சியூமர் நிறுவனத்திடம் பிஎஸ்லெரியை விற்க முன்வந்துள்ளார்.ஏற்கனவே மினரல் வாட்டர் விற்பனையில் ஈடுபட்டு வரும் டாடா நிறுவனம், 122 வாட்டர் பிளாண்டுகளை உடைய பிஸ்லெரி நிறுவனத்தை வாங்குவதன்மூலம் இந்தியாவின் மிகப்பெரிய பேக்கேஜ் வாட்டர் நிறுவனமாக மாறவுள்ளது.

 

Tags :

Share via