6-வது முறையாக தேர்வான இந்தியா... ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக தொடர்கிறது...

by Admin / 16-10-2021 10:27:58pm
6-வது முறையாக தேர்வான இந்தியா... ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக தொடர்கிறது...

ஐநா மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக இந்தியா தொடர்ந்து 6-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுசபை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பை நியூயார்க் நகரில்  நேற்று நடத்தியது.

இதில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று இந்தியா தொடர்ந்து 6-வது முறையாக ஐநா மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகளின் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2022 ஆம் ஆண்டு தொடங்கி 2024 ஆம் ஆண்டு வரை இந்தியா ஐநா மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும்.
 
இதனிடையே நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்தியா சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஐநா மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக குறைந்தது 97 நாடுகளின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via