திமுக அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது: ஜெயக்குமார்

by Staff / 01-03-2024 04:02:33pm
திமுக அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது: ஜெயக்குமார்


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்கள்  சந்திப்பில், அதிமுக மீதான அச்சத்தால் திமுக அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது. இது ஒரு தோல்வி பயம் தான். எந்தெந்த கட்சிகள் எங்கு செல்லும் என்பது இன்னும் பத்து நாட்களில் தெரியவரும். அதுவரை இடைவேளை. செல்வப்பெருந்தகையின் கருத்துக்களை பார்க்கும் போது, பிரேக்கிங் ஆகப் போவதாகதான் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக நாங்கள் யாரிடமும் சென்று கெஞ்சவில்லை.எங்கள் தலைமையில் நல்ல கூட்டணி அமையும். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.  திமுக எங்களுக்கு பிடிக்காத அரசு, மக்கள் விரோத அரசு. தலைமைச் செயலகத்திலேயே வெடிகுண்டு வீசப் போகிறார்கள் என மிரட்டல் வந்திருக்கிறது. தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம், போதை கலாச்சாரங்கள் என சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. திமுக அரசு ஆளுகின்ற தமிழகம் மிக மோசமான மாநிலமாக இருக்கிறது.
 

 

Tags :

Share via