திருவனந்தபுரம் - மங்களுர் தினசரி இரவு நேர ரயில் நாகர்கோவிலுக்கு நீட்டிப்பு செய்ய கோரிக்கை.  

by Editor / 09-07-2023 09:45:01am
திருவனந்தபுரம் - மங்களுர் தினசரி இரவு நேர ரயில் நாகர்கோவிலுக்கு நீட்டிப்பு செய்ய கோரிக்கை.   கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பல்வேறு பணிகளுக்காக தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் கேரளாவிற்கு சென்று வருகின்றனர். கன்னியாகுமரிக்கு வரும் &nbsp;சுற்றுலா பயணிகள் வயனாடு, மங்களூர்;, கூர்க்கு போன்ற பகுதிகளில் நேரடி இரவு நேர ரயில் வசதி இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை தரிசித்துவிட்டு மேற்கு கடற்கரை மார்க்கம் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயில், உடுப்பி, கும்பசேரி, தர்மஸ்தலா, கோகர்னா போன்ற புனித இடங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு நேரடி ரயில் வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். &nbsp; &nbsp; &nbsp; &nbsp;தற்போது குமரி மாவட்டத்திலிருந்து &nbsp;கேரளாவுக்கு செல்ல வேண்டுமானால் மொத்தம் ஐந்து தினசரி ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் அதிகாலையில் செல்லும் இரண்டு ரயில்களில் பயணம் செய்தால் மட்டுமே முழு கேரளாவுக்கும் பயணிக்க முடியும். இந்த ரயில்களை விட்டால் அடுத்த ரயிலாக காலையில் 9.00 மணிக்கு கன்னியாகுமரி &ndash; புனே ரயில்; அடுத்து காலை 10.30 மணிக்கு கன்னியாகுமரி &ndash; பெங்களுர் ரயில் ஆகும். காலை 10:30 மணிக்கு புறப்படும் இந்த ரயிலை விட்டால் 11 மணி நேரங்கள் கழித்து தினசரி ரயிலாக இரவு சென்னை &ndash; குருவாயூர் ரயில் மட்டுமே உள்ளது. இந்த மூன்று ரயில்களும் திருச்சூர் பாலக்காடு வரை மட்டுமே செல்லும். காலை 10:30 முதல் இரவு 9:40 வரை சுமார் 11 மணி நேரம் கேரளாவுக்கு செல்ல எந்த ஒரு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் குமரி மாவட்டத்திலிருந்து கிடையாது. பொதுவாக இரவு நேர ரயில்கள் என்று இயக்கப்படும் ரயில்கள் எல்லாம் மாலை 4:00 மணி முதல் இரவு 10 மணிவரை ஒரு நகரத்திலிருந்து புறப்படுமாறு இயக்கப்படும். ஏடு. காட்க நாகர்கோவிலிருந்து மாலை சென்னை, கோவை, பெங்களுர், மதுரை, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு இரவு நேர ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால் கேரளாவுக்கு இரவு நேர ரயில்கள் என்று சொல்ல ஒரு ரயில் கூட இதுவரை குமரி மாவட்டத்திலிருந்து இயக்கப்படவில்லை. குமரி மாவட்டத்துக்கு 1979-ம் ஆண்டு முதல் ரயில்கள் வந்து இயங்கி வருகிறது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் திருவனந்தபுரம் கோட்டம் குமரி மாவட்ட பயணிகள் வசதிக்காக ஒரு இரவு நேர தினசரி ரயிலை கூட இயக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. <br /> &nbsp; &nbsp; &nbsp; &nbsp;குமரி மாவட்ட பயணிகள் மங்களுர் மற்றும் வட கேரளா பகுதிகளுக்கு செல்ல ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்து வசதி, விமான வசதி கிடையாது. இங்கு உள்ள பயணிகளுக்கு ரயில் வசதி மட்டுமே உள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து மங்களுர்க்கு செல்ல மூன்று தினசரி இரவு நேர ரயில்கள் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள பயணிகள் தற்போது பேருந்துகளில் திருவனந்தபுரம் சென்று விட்டு அங்கிருந்து புறப்படும் இந்த மூன்று ரயில்களிலும் வட கேரளா மற்றும் மங்களூருக்கு பயணிக்கின்றனர். இவ்வாறு குமரி மாவட்ட பயணிகள் நேரடி ரயில் வசதி இல்லாத காரணத்தால் திருவனந்தபுரம் சென்று &nbsp;பயணிப்பதால் குமரி மாவட்டத்திலிருந்து பயணிக்கும் பயணிகளின் வருவாய் திருவனந்தபுரம் ரயில் நிலையத்துக்கு சென்று அங்கு வளர்ச்சிக்கு மறைமுகமாக உதவுகிறது. குமரி மாவட்ட பயணிகள் வேறு மார்க்கங்களில் பயணிக்க முடியாத காரணத்தால் இந்த மூன்று மங்களூர் ரயில்களின் வருவாய் குமரி மாவட்ட பயணிகளின் மூலம் கிடைக்கும் வருவாய் கணிசமான அளவில் உள்ளது. திருவனந்தபுரம் - மங்களூர் ரயில்களில் ஒரு ரயிலை நீட்டிப்பு செய்வதால் கேரளா பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்கப்போவது இல்லை. &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;கன்னியாகுமரியிலிலுருந்து நேரடியாக மங்களூருக்கு தினசரி இரவு நேர ரயில் வசதி செய்து தர வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டென்னீஸ் அவர்கள் 1989-ம் ஆண்டு ரயில் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அப்போது முதல் இதுவரை சுமார் 30 ஆண்டுகளாக கன்னியாகுமரியிலிருந்து மங்களூருக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்படும் ரயில்களில் 47/48 என்ற எண் கொண்ட ரயில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்த ரயிலை திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் திருவனந்தபுரத்துடன் நிறுத்தி விட்டனர். இதற்கு மாற்று ஏற்பாடாக இதுவரை எந்த ரயில் வசதியும் செய்யப்படவில்லை. இந்த கால கட்டத்தில் குமரி மாவட்ட ரயில் பயணிகளுக்கு ரயிலை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் குமரி மாவட்டத்துக்கு எதிராக செயல்பட்டனர். இந்த கண்ணனூர் ரயில் 2005-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மங்களூர் வரை நீட்டிப்பு செய்து 16347/16348 &nbsp; எண்கொண்ட ரயிலாக திருவனந்தபுரம் - மங்களுர் மார்க்கத்தில் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூருக்கு இயக்கப்படும் 16347/16348 &nbsp; ரயிலை நாகர்கோவில் அல்லது திருநெல்வேலி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Tags :

Share via