ஆட்சியர் அலுவலக லிப்டில் சிக்கிய 7 பேர்

by Staff / 06-05-2024 03:23:23pm
ஆட்சியர் அலுவலக லிப்டில் சிக்கிய 7 பேர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள லிப்டில் 7 பேர் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரான்ஸ்பார்மர் பழுதாகி மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் 9ஆவது மாடியில் லிப்ட் சிக்கிக் கொண்டது. இதனால், லிப்டுக்குள் பெண்கள் உள்பட 7 பேர் மாட்டிக் கொண்டனர். உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள், சாவி மூலம் லிப்டை திறந்து அவர்களை பத்திரமாக மீட்டனர். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via