அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி-மருத்துவமனையில் அனுமதி.

by Editor / 09-10-2023 08:58:58am
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி-மருத்துவமனையில் அனுமதி.

புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, நெஞ்சுவலி காரணமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, புழல் சிறையில் மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவருக்கு இன்று காலை திடீரென்று மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சட்டமன்றம் கூடும் நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் முதல்வர் மற்றும்  அமைச்சர்கள்நேரில் சென்று பார்வையிட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி-மருத்துவமனையில் அனுமதி.

Share via