திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவுக்கு 25 உறுப்பினர்கள் நியமனம்

by Editor / 16-09-2021 05:53:49pm
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவுக்கு 25 உறுப்பினர்கள் நியமனம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளர் சீனிவாசன், அணைக்கட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ நந்தகுமார், எஸ்ஆர்எம்யூ ரெயில்வே பணியாளர் சங்கத்தின் தலைவர் கண்ணையா உட்பட 25 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அறங்காவலர் குழு தலைவராக முதல்வர் ஜெகன் மோகனின் சித்தப்பா சுப்பா ரெட்டி 2வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம், தங்கள் மாநிலத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும்படி ஆந்திர அரசை பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன. இதனால், இந்த அறங்காவலர் குழுவில் முதல் முறையாக கூடுதலாக 50 பேர் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்படுகின்றனர்.

திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றில் முதல் முறையாக அறங்காவலர் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 75 பேர் கொண்ட மெகா அறங்காவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via