அம்மன் கழுத்தில் கிடந்த திருமாங்கல்யத்தை திருடிச் சென்ற பெண் கைது.

by Editor / 23-08-2023 09:56:37am
அம்மன் கழுத்தில் கிடந்த திருமாங்கல்யத்தை திருடிச் சென்ற பெண் கைது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியில் பிரபலமான
காளியம்மன் கோவில் உள்ளது அதன் அருகில் கங்கை அம்மன் கோவில் உள்ளது தினம்தோறும் காலை நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக பூசாரி கோவில் நடையை திறந்து வைப்பது வழக்கம் நேற்று காலை சங்கரன்கோவிலில் இருந்து தனியார் பஸ்ஸில் வந்த மர்ம பெண் மாவடிகால் பகுதியில்  இறங்கி வந்துள்ளார் அதன் பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென கோவில் கருவறைக்குள் நுழைந்து அம்மன் கழுத்தில் கிடந்த மாங்கல்யத்தை திருடி சென்று விட்டு சிறிது நேரத்தில் அருகில் உள்ள மற்றொரு கோவிலின் அம்மனின் கழுத்தில் கடந்த மாங்கல்யத்தை திருடிவிட்டு தப்பி சென்று விட்டாள் அதன் பின்னர் பூசாரி அம்மனுக்கு பூஜை செய்த பொழுது அம்மனின் கழுத்தில் கிடந்த மாங்கல்யம் திருடு போனது தெரிய வந்தது இது குறித்து ஊர் நாட்டாமை செல்வகுமார் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் அம்மனின் கழுத்தில் கிடந்த மாங்கல்ய நகையை திருடிய பெண்ணை கோவிலில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து  தேடிய நிலையில் அவர் சங்கரன் கோவில் அருகிலுள்ள ராமசாமியாபுரம் பகுதியை சேர்ந்த அருள்செல்வம் மனைவி சண்முக சுந்தரி என்பது தெரியவந்தது அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.அவள் ஏராளமான  ஆலயங்களில் அம்மன் கழுத்தில் கிடைக்கும் தங்க திருமாங்கல்ய சங்கிலிகளை திருடிச்சென்றது தெரியவந்துள்ளது.

 

Tags : அம்மன் கழுத்தில் கிடந்த திருமாங்கல்யத்தை திருடிச் சென்ற பெண்

Share via