விஷவாயு கசிவால் 28 பேருக்கு உடல்நலக்குறைவு

by Staff / 24-08-2023 03:59:05pm
விஷவாயு கசிவால் 28 பேருக்கு உடல்நலக்குறைவு

குஜராத்தில் விஷ வாயுவை சுவாசித்த 28 பேர் உடல் நலக்குறைவு அடைந்தனர். பரூச் மாவட்டத்தில் உள்ள ஜம்புசார் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. சரோட் கிராமத்தில் உள்ள பிஐ இண்டஸ்ட்ரீஸில் உள்ள தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டதால் புரோமின் வாயு கசிந்தது. அப்போது தொழிற்சாலையில் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் இருந்தனர். அங்கிருந்து வெளியேறிய வாயுவை சுவாசித்ததால் தொழிலாளர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அவர்களில் 28 பேர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Tags :

Share via