நிலச்சரிவால் இடிந்து விழுந்த கட்டடங்கள்

by Staff / 24-08-2023 03:53:25pm
நிலச்சரிவால் இடிந்து விழுந்த கட்டடங்கள்

இமாச்சல பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான கட்டடங்கள் ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளன. இயற்கை சீற்றத்தால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குலு மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக பல கட்டடங்கள் இடிந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via