முதியவர் கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபர்

by Staff / 29-08-2023 02:42:59pm
முதியவர் கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபர்

பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி திடீர்குப்பம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த நாராயணன் வயது -80 என்ற விவசாயி வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது அருகே உள்ள நிலத்தின் உரிமையாளரான காமராஜ் மகன் ராமமூர்த்தி வயது - 24 என்ற இளைஞர்கும், நாராயணனுக்கும் இடையே நில பிரச்சினையில் தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் முதியவர் நாராயணன் கழுத்தை நெறித்து கொலை செய்த ராமமூர்த்தி தப்பி ஓடியுள்ளார். நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து வயலில் கிடந்துள்ளார், வயலுக்கு வந்த நாராயணனின் மனைவி அழகம்மாள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சம்பவம் குறித்து பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார் இறந்து போன நாராயணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை செய்து, முதியவர் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ராமமூர்த்தியை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via