தாலி கட்டிய கையோடு காதல் மனைவியை தேர்வு எழுத அழைத்து வந்த கணவன்

by Admin / 26-05-2023 11:30:09am
 தாலி கட்டிய கையோடு காதல் மனைவியை தேர்வு எழுத அழைத்து வந்த கணவன்

கோவில்பட்டி அருகே தாலி கட்டிய கையோடு காதல் மனைவியை தேர்வு எழுத அழைத்து வந்த கணவன் - கல்விதான் நமக்கு முக்கியம் என்று காத்திருந்த புதுமாப்பிள்ளை - உற்சாகத்தோடு தேர்வு எழுதிய புது மணப்பெண்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் உள்ள எத்திலப்பன்நாயக்கர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சைவேல், சின்னம்மாள் தம்பதியின் மகன் சுந்தரவேல் ராமமூர்த்தி. இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த முத்துவேல் - மாரியம்மாள்  தம்பதியின் மகள் உமா மகேஸ்வரி. இவர் கீழ் ஈராலில் உள்ள தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிபிஏ இறுதி ஆண்டு படித்து வருகிறார்.சுந்தரவேல் ராமமூர்த்தி. உமா மகேஸ்வரி. இருவரும் உறவினர்கள் மட்டுமின்றி சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவே, இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்று இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதே நேரத்தில் உமா மகேஸ்வரிக்கு இறுதி ஆண்டுக்கான தேர்வு இன்று தொடங்கியுள்ளது. இதனால் தேர்வு எழுத வேண்டும் என்று உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இதற்கு சுந்தரவேல் ராமமூர்த்தி  மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்து மட்டுமின்றி, 

இன்று காலையில் 7 - 9 மணிக்குள் முகூர்த்தம் இருந்துள்ளது. தாலி கட்டிய கையோடு சுந்தரவேல் ராமமூர்த்தி    தனது மனைவி உமா மகேஸ்வரியை  தேர்வு எழுத கல்லூரிக்கு அழைத்து வந்தார். கல்லூரி நிர்வாகத்தினர் புதுமணத் தம்பதியை வாழ்த்தியது மட்டுமின்றி, உற்சாகமாக தேர்வு எழுதும் படி உமா மகேஷ்வரியிடம் அறிவுறுத்தினர்‌. இதையடுத்து உமா மகேஸ்வரியும் மகிழ்ச்சியோடு தேர்வரைக்கும் சென்று  தேர்வு எழுதினார். தனது காதல் மனைவி தேர்வு எழுதி முடிக்கும் வரை சுந்தரவேல் ராமமூர்த்தி    தேர்வு மையத்துக்கு வெளியே காத்திருந்து, தேர்வு முடிந்தவுடன் மகிழ்வோடு மனைவி அழைத்துச் சென்றார்.

.கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 தாலி கட்டிய கையோடு காதல் மனைவியை தேர்வு எழுத அழைத்து வந்த கணவன்
 

Tags :

Share via