போதையில் மகளை துண்டு துண்டாக்கிய தாய்

by Staff / 04-09-2023 11:14:14am
போதையில் மகளை துண்டு துண்டாக்கிய தாய்

பிரேசிலை சேர்ந்த ரூத் ஃப்ளோரியானோ என்ற பெண் ஒருவர் தன் கணவரை பிரிந்து 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரின் 3வது குழந்தை தந்தை வேண்டும் என அடம்பிடிக்க, போதையில் இருந்த ரூத் குழந்தையை கொடூரமாக தாக்கியுள்ளார். இவர் அடித்ததில் அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பின் அதை மறைக்க குழந்தையின் உடல் பாகங்களை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்துள்ளார். அவர், வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக அருகிலிருந்தவர்கள் புகாரளிக்க காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து ரூத் ஃப்ளோரியானோவை கைது செய்தனர்.

 

Tags :

Share via