மதுப்புட்டிகளைக் கடத்திய பெண் உள்ளிட்ட இருவா் கைது

by Staff / 08-09-2023 04:49:56pm
மதுப்புட்டிகளைக் கடத்திய பெண் உள்ளிட்ட இருவா் கைது

விழுப்புரம் மாவட்ட எஸ். பி. உத்தரவின்பேரில், மரக்காணம் போலீஸாா் புதுச்சேரி- சென்னை கிழக்குக் கடற்கரைச்சாலையில் ரங்கநாதபுரம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை மடக்கி சோதனை செய்தபோது, அவா்கள் வெளி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட 180 மில்லி லிட்டா் கொள்ளளவுக் கொண்ட 150 மதுப்புட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் மதுப்புட்டிகளை கடத்தி வந்தவா்கள் புதுச்சேரி, பெரிய காலாப்பட்டு பகுதியைச் சோந்த கோபாலகிருஷ்ணன்(45), மரக்காணம் வட்டம், சிறுவாடியைச் சோந்த கண்ணன் மனைவி சிவரஞ்சனி (39) என்பதும் தெரியவந்தது.இதையடுத்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

 

Tags :

Share via