பாம்பை கொன்றவர் மீது வழக்குப்பதிவு
உத்தரபிரதேச மாநிலம், புடான் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் என்பவர் 2 நாட்களுக்கு முன் பாம்பு ஒன்றைக் குச்சியால் அடித்துக் கொன்றார். இந்த சம்பவத்தை யாரோ வீடியோ எடுத்து விலங்குகள் நல ஆர்வலர் விக்கேந்திர ஷர்மாவுக்கு அனுப்பி உள்ளனர். இந்த நிலையில், அவர் கொன்றது கோப்ரா வகையைச் சேர்ந்த அரிதான பாம்பு என்பதால், ஷர்மா அளித்த புகாரின் அடிப்படையில் சுக்பீர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாம்பை அடித்து கொள்வது சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது
Tags :