அனைத்து கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும் கனிமொழி எம்பி

by Staff / 10-09-2023 03:47:37pm
அனைத்து கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும் கனிமொழி எம்பி

கோவில்பட்டியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனிமொழி கருணாநிதி எம்பி கலந்து கொண்டு பேசும்போது தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களாக வாங்கி விரைவில் நடவடிக்கை எடுப்பதுதான் மக்கள் களம் நிகழ்ச்சி. கடைக்கோடி கிராமங்களில் வசித்து வரக்கூடிய நீங்கள் உங்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்க வேண்டுமென்று சொன்னால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டும். என்றார் மேலும்.வளர்ச்சி திட்டப்பணிகள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு முன்னோடி திட்டங்களை அரசுத்துறைகள் வாயிலாக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய அரசு, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தார் சாலை வசதி, சிமெண்டு சாலை வசதி, வாறுகால் வசதி, நீர்தேக்கத்தொட்டி, உயர்மட்ட பாலம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தடுப்புச்சுவர், சமுதாயக்கூடம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றி தருவேன் என்று அனைவருக்கும் உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
 

 

Tags :

Share via