நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

by Staff / 14-09-2023 04:37:07pm
நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

கேரள மாநிலத்தில் நிஃபா வைரஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஏற்கெனவே ஐந்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளையும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இருப்பினும் தேர்வுகள் வழக்கும் போல் நடைபெறும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிஃபா வைரஸ் காரணமாக இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் கவனமுடன் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via