சைபர் கிரைம் ஓடிபி எண் கேட்டால் தர வேண்டாம்
மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கை சைபர் கிரைம் குற்றவாளிகள் சிலர் குறிவைத்து பணம் பறிக்க முயற்சிக்க வாய்ப்புள்ளது. எனவே, வங்கி தரப்பில் இருந்து பேசுவதாக யாரேனும் செல்போனில் தொடர்பு கொண்டு, ‘ஓடிபி’ எண் கேட்டால் தர வேண்டாம். இத்திட்டத்திற்காக ஓடிபி எண் எதுவும் கேட்கப்படுவதில்லை. உரிமைத் தொகை வங்கிக் கணக்குக்கு வர ஒருசிலருக்கு தாமதம் ஏற்படலாம். அதற்காக யாரும் கவலையடைய வேண்டாம்.
Tags :