அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்த வேண்டும் - பிரேமலதா
ஊழல் செய்வதில் முதலாவதாக உள்ள அமைச்சர் துரைமுருகன் தான் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விருதுநகர் அருப்புக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், '1000 ரூபாய் பணம் என்பது திமுக சொந்த பணமல்ல மக்கள் வரிப்பணம். தினமும் ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் தமிழகத்தில் இருந்து கடத்தப்படுகின்றன. அந்தத் துறைக்கான அமைச்சர் துரைமுருகனிடம் கேட்டால் எனக்கு எதுவும் தெரியாது என்பார். அமலாக்கத்துறை முதலில் அவர் வீட்டில் தான் ரெய்டு நடத்த வேண்டும். ஊழல் செய்வதில் முதலாவதாக உள்ளவர் அமைச்சர் துரைமுருகன் தான்.' இவ்வாறு அவர் கூறினார்.
Tags :