பேரவை முதல் கூட்டத்தொடர் - கமல்ஹாசன்

by Editor / 20-06-2021 05:06:18pm
பேரவை முதல் கூட்டத்தொடர் - கமல்ஹாசன்

தமிழகத்தின் 16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணா் அரங்கத்தில் நாளை நடைபெறவுள்ளது.இதற்காக,கடந்த வெள்ளிக்கிழமை முதல் சட்டப்பேரவை உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர்கள்,பேரவை செயலக ஊழியர்கள் உள்ளிட்டோர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, கூட்டத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

"16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை முதல் துவங்குகிறது.மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை தந்து,அனைத்து அரசியல் தரப்புகளுக்கும் சமவாய்ப்பளித்து, ஆரோக்கியமான விவாதங்கள் நிகழச்செய்யவும், பேரவையின் மாண்பை நிலைபெறச் செய்யவும் உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்",என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via