தலைக்கவசம் அணிந்து வந்து பதவியேற்ற உறுப்பினர்கள்

by Editor / 02-03-2022 02:44:33pm
தலைக்கவசம் அணிந்து  வந்து பதவியேற்ற உறுப்பினர்கள்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் உள்ள 18 வார்டு உறுப்பினர்களுக்கு  தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக  22ஆம் தேதி வெற்றி பெற்ற நிலையில் அதிமுகவை சேர்ந்த 9 நபர்களும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஒரு நபரும், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த இரண்டு நபர்களும், திமுகவை சேர்ந்த இரண்டு நபர்களும், சுயேட்சைகள் மூன்று நபர்களும், தேமுதிக சார்ந்த ஒரு நபரின் 18 நபர்கள் வெற்றியடைந்தனர் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பல்வேறு பகுதிகளில் அந்தந்த கட்சியின் கட்டுபாட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உறுப்பினர்கள் பதவியேற்ப்பு விழாவுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வரும்பொழுது மண்டை உடைக்கப்படும் என குறிப்பிட்ட கட்சி  தரப்பில் தெரிவிக்கப்பட்டதக்க கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று திசையன்விளை பேரூராட்சியில் பதவியேற்பு விழாவுக்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து வந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. 

தலைக்கவசம் அணிந்து  வந்து பதவியேற்ற உறுப்பினர்கள்
 

Tags : Incumbent members wearing helmets

Share via