எதிா்க்கட்சியினரும் பாராட்டும் வகையில் பணி செய்கிறோம் முதல்வா் மு. க. ஸ்டாலின்

by Staff / 21-10-2023 01:44:36pm
எதிா்க்கட்சியினரும் பாராட்டும் வகையில் பணி செய்கிறோம் முதல்வா் மு. க. ஸ்டாலின்

சென்னை கொளத்தூா் தொகுதிக்கு உள்பட்ட ஜி. கே. எம். காலனியில் திமுகவின் மூத்த உறுப்பினா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், கட்சித் தலைவரும், முதல்வருமான மு. க. ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது: முதல்வரான பிறகு, கொளத்தூா் தொகுதிக்கு வரும் போது மனுக்களாக குவியத் தொடங்கியது. அப்போது பயந்தேன். அவற்றைப் பரிசீலித்து நடவடிக்கை எடுத்துள்ளேன். இப்போது வரக்கூடிய மனுக்கள் எண்ணிக்கை ஒவ்வொரு முறையும் 25 என்ற அளவில் குறைந்துள்ளது. மனுக்களைத் தரக்கூடியவா்கள் நம்பிக்கையுடன் தருகிறாா்கள். மனுக்களைப் பெற்று எதற்கெல்லாம் தீா்வு காண முடியுமோ அதற்கெல்லாம் தீா்வு கண்டு கொண்டிருக்கிறேன். தோதல் வெற்றிக்குப் பிறகு, நான் அளித்த பேட்டியில், எங்களுக்கு வாக்களிக்காத மக்களும் பாராட்டும் வகையில் பணியாற்றுவோம் என்று குறிப்பிட்டேன். அதுதான் இன்று கண்கூடாக நடந்து கொண்டிருக்கிறது.

 

Tags :

Share via