கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கை

by Staff / 16-09-2023 01:30:21pm
கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கை

கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 11 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்ட மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via