ஸ்ரீ வெங்கடாஜலபதி திருப்பதி கொடை ரத யாத்திரை
புரட்டாசி மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில் ,சென்னை யானை கவுனியிலிருந்து நேற்று கொடைகளின் ஊர்வலம் தொடங்கியது இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் திருப்பதி கொடை ரத யாத்திரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடையையும் ஸ்ரீ வெங்கடாஜலபதியே வழிபட்டனர்.
இன்று பெரம்பூர்,பெரியாா்நகர் ,ஜி.கே.எம்.காலணி வில்லிவாக்கம்,கொளத்தூர் வழியாக திருப்பதி குடை சென்று கொண்டிருக்கிறது . அங்கங்கே பல்வேறு பகுதிகளில் திருப்பதி ஏழுமலையானின் சிலை .போட்டோ வைத்து வழிபாடு நடத்தப்பட்ட இடங்களில் எல்லாம் கற்பூர தீபா ஆராதனை செய்து வழிபட்டதோடு பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர்.
Tags :