தூத்துக்குடி மாவட்டத்தில்  123 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது. 

by Editor / 17-09-2023 06:51:57pm
தூத்துக்குடி மாவட்டத்தில்  123 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட 7 எதிரிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - இந்த ஆண்டு இதுவரை 123 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  நடவடிக்கை.

கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தாறு ராஜாப்புதுக்குடி பகுதியில் விற்பனைக்காக கடந்த 22.08.2023 அன்று கண்டெய்னர் லாரியில் கஞ்சாவை கடத்தி வந்த வழக்கில் தூத்துக்குடி ஸ்டேட்பாங்க் காலனியை சேர்ந்த சேகர் மகன் விஜயகுமார் (36), தூத்துக்குடி ஆரோக்கியபுரம் கோவில்பிள்ளைவிளை பகுதியை சேர்ந்த பாலசந்திரன் மகன் ஜான் அற்புத பாரத் (33) மற்றும் ஆந்திரமாநிலம், விஜயவாடா, கணேஷ்நகரை சேர்ந்த சீக்கட்லா வெங்கடராவ் மகன் சீக்கட்லா சட்டிபாபு (39) ஆகியோரை கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான விஜயகுமார், ஜான் அற்புத பாரத் மற்றும் சீக்கட்லா சட்டிபாபு ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு
மற்றும் காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையிலும்,  தூத்துக்குடி பழையகாயல், தேவர் காலனியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் 1) லெட்சுமணன், சாத்தான்குளம் வீர இடைகுடி பகுதியை சேர்ந்த வேல்பாண்டி மகன் 2) செல்லப்பா, விளாத்திகுளம் சூரங்குடி சி.ஆர் காலனியை சேர்ந்த பரமசிவம் மகன் 3) கணேசமூர்த்தி, சாத்தான்குளம் முதலூர் ரோடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மகன் 4) ஆண்டோ வின்ஸ்டன், தூத்துக்குடி ஸ்டேட்பாங்க் காலனியை சேர்ந்த சேகர் மகன் 5) விஜயகுமார், தூத்துக்குடி ஆரோக்கியபுரம் கோவில்பிள்ளைவிளை பகுதியை சேர்ந்த பாலசந்திரன் மகன் 6) ஜான் அற்புத பாரத் மற்றும் ஆந்திரமாநிலம், விஜயவாடா, கணேஷ்நகரை சேர்ந்த சீக்கட்லா வெங்கடராவ் மகன் 7) சீக்கட்லா சட்டிபாபு ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் மேற்படி எதிரிகளான லெட்சுமணன், செல்லப்பா, கணேசமூர்த்தி மற்றும் ஆண்டோ விஸ்டன் ஆகியோரை மதுரை மத்திய சிறையிலும், எதிரிகள் விஜயகுமார், ஜான் அற்புத பாரத் மற்றும் சீக்கட்லா சட்டிபாபு ஆகியோரை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைத்தனர்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 எதிரிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 12 எதிரிகள் உட்பட 123 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது. 

Share via