பாலியல் தொந்தரவு; சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

by Editor / 29-12-2021 04:50:03pm
பாலியல் தொந்தரவு; சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

 

திசையன்விளையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ பள்ளி தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் செயல்படும் சமேரியா மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் 51. இவர் பிளஸ் 1 மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

மாணவிகளின் மொபைல் போன்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி உள்ளார். இதுகுறித்து மாணவிகள் மற்றும் பெற்றோர் புகார் செய்தனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் இன்று சிஎஸ்ஐ பள்ளிகளின் மேலாளர் புஷ்பராஜ், தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.  மேலும் இவர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்யும்படி பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் கேட்டுக்கொள்கின்றனர் கைது செய்யாவிட்டால் மாபெரும் போராட்டம்  நடத்தப்போவதாக  பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

 

Tags :

Share via