தகனம் செய்யும் சமயத்தில் கொரோனாவால் இறந்த மூதாட்டி எழுந்து வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி
கொரோனா தொற்றால் இறந்ததாக மூதாட்டி ஒருவரை தகனம் செய்ய சென்ற போது எழுந்து உட்கார்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த சகுந்தலா கெய்க்வாட் (76) என்ற மூதாட்டிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். இதை தொடர்ந்து மூதாட்டி மோசமடைந்ததால் அவர் கடந்த 10ஆம் தேதி பரமதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு படுக்கை கிடைக்க நேரமானதால் மூதாட்டி சுயநினைவு இழந்து அசைவில்லாமல் போனார். இதனால் மூதாட்டி இறந்து விட்டதாக எண்ணி அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகளை ஏற்பாடு செய்தனர்.
மூதாட்டியை சவப்பெட்டிக்குள் வைத்து தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மூதாட்டி அழுது கொண்டே எழுந்து அமர்ந்துள்ளார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவருக்கு மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags :