பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த பள்ளி மாணவர்கள் வெளியான ஷாக் ரிப்போர்ட்

by Staff / 10-10-2022 12:21:35pm
பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த பள்ளி மாணவர்கள் வெளியான ஷாக் ரிப்போர்ட்

மெக்சிகோவின் தெற்கு மாகாணமான சியாபாஸில் உள்ள மேல்நிலை பள்ளி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்த போது மாணவர்கள் பலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மயக்கமடைந்த 57 மாணவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்களின் முதற்கட்ட சோதனையில், அவர்கள் அனைவருக்கும் விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 வாரங்களில் சியாபாஸ் மாகாணத்தில் உள்ள மேலும் 2 பள்ளிகளில் மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 3 பள்ளிகளின் மாணவர்களுக்கு விஷம் தரப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னணியில் போதை பொருள் கும்பல் இருக்கலாம் என மெக்சிகோ போலீஸ் சந்தேகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via