ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருக்கு ED நோட்டீஸ்
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்க இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பணமோசடி வழக்கு விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி விவகாரத்தில் பணமோசடி நடந்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் பரூக் அப்துல்லாவிடம் விசாரணை நடத்தப்படும். ஏற்கனவே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபானக் கொள்கை வழக்கிலும், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சுரங்கமுறைகேடு வழக்கிலும் அமலாக்க இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Tags :